Friday, May 1, 2015

ராசி பலன்களை நம்பலாமா ?

பத்திரிகைகளில் தினப்பலன் , வார பலன் , மாத பலன்கள் வருவதை நாம் பார்க்கிறோம் .அதைப்  படித்துவிட்டு நடக்க வில்லை என்றால் ஜோதிடம்
பொய் என்று சொல்பவர்களை நான் பார்த்துள்ளேன் .

உலகத்தில் உள்ள அனைவரும் பன்னிரண்டு ராசிகளில் ஒரு ராசியில் சேர்ந்து விடுவார்கள் . மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வீடு வாங்குவார்கள் என்று சொன்னால் , உலகத்தில் பன்னிரெண்டில் ஒருவர் வீடு வாங்க போகிறார் , அவர் மேஷ ராசிக்காரர் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

ஒருவர் ஜாதகத்தில் என்ன தசை , என்ன புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து ,
ஜாதகத்தை முழுவதுமாக அலசி விட்டு தான் பலன் சொல்ல வேண்டுமே தவிர வெறும் ராசியை வைத்து பலன் கூறக் கூடாது .

அப்போது ராசி பலன்களை மொத்தமாக புறக்கணித்து விடலாமா என்றால் இல்லை .

கோச்சார கிரக நிலைகள் முக்கியம் . அனால் அவைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது ஜாதகத்தின் தன்மையை பொறுத்தது .

கோச்சாரத்தில்  நாம் சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் ,குரு பெயர்ச்சி பலன் என்று சொல்கிறோமே தவிர சுக்கிர பெயர்ச்சி பலன் , புதன் பெயர்ச்சி பலன் என்று சொல்வதில்லை .இதற்குகாரணம் இவைகள் வேகமாக நகரும் கிரகங்கள் .எனவே இவற்றை ஆண்டு பலன் கூறும் பொது கணக்கில் எடுத்து கொள்வதில்லை .

 தனியாக வெறும் ராசியை மட்டும் வைத்து பலன் கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை .ஜாதகத்தை முழுக்க அலசிய பிறகே பலன் கூற முடியும் .

கோச்சார கிரக நிலைகளை , ஜாதகத்தின் தசா புக்தி பலனுடன் இணைத்து ஆண்டு பலனை கணிக்க வேண்டும் .

 தசா நாதன் மற்றும் புக்தி நாதன் , லக்னத்தில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் , அவரை  சுப கிரகங்கள் பார்க்கின்றனவா , இல்லை பாவ கிரகங்கள் பார்க்கின்றனவா, அவர் எந்த இடத்து அதிபதியுடன் இணைந்து உள்ளார் . இவை அனைத்தையும் அலசியே  பலன் கூற வேண்டும்




Thursday, April 30, 2015

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகம் Ramakrishna paramahamsa horoscope




 கும்ப லக்னம் , கும்ப ராசி .லக்னத்தில் சூரியனும் புதனும் சந்திரனும் சேர்ந்து உள்ளார்கள் . புதாத்திய யோகம் நல்ல பேச்சு திறனை காட்டுகிறது

5 ஆம் இடமான பூர்வ புண்ய ஸ்தானத்தில் குரு அமர்ந்து லக்னத்தை  பார்க்கிறார் .5 ஆம் இடத்து அதிபதி லக்னத்தில்உள்ளார்  .ஞானிகளுக்கு பொதுவாக பூர்வ புண்ய ஸ்தானம் மிக நன்றாக இருக்கும் . அது அவர்கள் முன் ஜென்மத்தில் செய்த தவத்தின் பயன் .
கர்மஸ்தானமான பத்தாம் இடத்தில் ஞான காரகன் கேது உள்ளார் . இது அவரின் ஞானத்தை காட்டுகிறது .

லக்னாதிபதி 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார் . அவர் புகழுக்கும் சனியே காரணமாகிறார் .
இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் . இவர் திருமணமானவர் என்பதை நினைவில் கொள்க .ஏழாம் இடத்து அதிபதி மற்றும் சுக்கிரன் அதிகமாக பாதிக்கப்படவில்லை .இவர் மனைவி அன்னை சாரதா தேவியும் ஒரு ஞானி .இவரது ஞான யோக வாழ்க்கைக்கு துணை நின்றவர் .
நரம்பு மண்டல காரகன் புதன் லக்னத்தில் இருக்கிறார் .புதன் வர்கோத்தமம் ஆகி உள்ளார்  . இவர் மென்மையான நரம்பு மண்டலத்தை கொண்டவர் .ஒரு முறை சுவாமி விவேகானந்தா இவர் படுக்கைக்கு அடியில் ஒரு நாணயத்தை வைத்து விட்டார் .இவரால் தூங்க முடியவில்லை .அவர் படுக்கைக்கு அடியில் தேடச்சொல்ல , அந்த நாணயம் எடுக்கப் பட்டது .இதைப்பற்றி விவேகானந்தா கூறும் போது , அவர் தொடர்ந்து த்யானம் செய்ததால் அவர் நரம்புகள் மிக மென்மை ஆகி விட்டன என்றார் .


ஏழாம் இடத்து அதிபதியும் , ஆறாம் இடத்து அதிபதியும்,எட்டாம் இடத்து அதிபதியும் இணைந்து லக்னத்தில் உள்ளனர் .திருமணம் ஆன போதும் மனைவியை தாயாகவே கருதினார் .

அற்புதமான ஜாதகம் !!!

Sunday, April 12, 2015

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஜாதகம் (Sri Ramana Maharishi Horoscope Analysis)


























பகவான் ரமண மகரிஷியைப் பற்றி அறியாதவர்கள் கீழே உள்ள Link ஐ கிளிக்
செய்யவும்

http://en.wikipedia.org/wiki/Ramana_Maharshi

பிறந்த தேதி : டிசம்பர் 30 , 1879
 நேரம் : 1:00am
 இடம் :திருச்சுழி ,அருப்புகோட்டை அருகே
கன்னி  லக்னம் . லக்னாதிபதியும், 10 ஆம் இடத்து அதிபதியுமான புதனும் பாக்யாதிபதி சுக்கிரனும்  இணைந்து அவருக்கு பெரும் புகழ் கொடுத்தார்கள் .
அது மட்டுமல்லாமல் லக்னாதிபதி தைரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உள்ளார் .சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி பகல் இரவு தெரியாமல் , உண்ணாமல் தவம் இருக்க தைரியம் வேண்டும் அல்லவா ?

பத்தாம் இடத்தில் உள்ள கேது அவருக்கு ஞானத்தை கொடுத்தார் .
 சந்திரனுடைய இணைவு கேதுவுக்கு மேலும் வலு சேர்த்தது .அத்துடன் பத்தாம் இடத்திற்கு  குருவின் பார்வையும் உள்ளது .இது அவரை இளம் வயதிலேயே மிகப் பெரிய ஞானி ஆக்கியது

தாய்க்கான காரகன் சந்திரனும் , தந்தைக்கான காரகன் சூரியனும் ராகு  கேதுவின் பிடியில் சிக்கி உள்ளார்கள் .மகரிஷியின் தந்தை இளம் வயதிலேயே இறந்து விட்டார் .பின்பு அவர் தாயைப் பிரிந்து திருவண்ணாமலைக்கு சென்று சென்று விட்டார்

6ஆம் இடத்து அதிபதி  சனி  7ஆம் இடத்தில் உள்ளார் .7ஆம் இடத்து அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார் .தைன்ய பரிவர்த்தனை . 8ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளார் .இவையே அவர் குடும்ப வாழ்க்கையில் ஈடு படாதததற்கு
 காரணம்

1892 ஆம்  ஆண்டு கேது புக்தியில் தந்தையை இழந்தார் .

1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சனி தசை , சூரிய புக்தியில் வீட்டை விட்டு வெளியேறினார் . ராகு உடன் நான்காம் இடத்தில் உள்ள சூரியன் அவரை வீட்டை விட்டு பிரித்தது . 5 ஆம் இடத்து அதிபதியான சனி அவருக்கு ஞானத்தை வழங்கினார் .

1916இல்  புதன் தசையின் போது அவர் தாயும் , தமையனாரும் திருவண்ணாமலைக்கு வந்து விட்டார்கள் .

19 மே 1922இல் தாயாரை இழந்தார் .அப்பொழுது கேது தசை கேது பக்தி நடப்பதை கவனிக்கவும்.
1932  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் PAUL BRUNTON என்னும் எழுத்தாளர் ரமண மகரிஷியை சந்தித்தார் . அப்பொழுது மகரிஷிக்கு சுக்கிர தசை , சுக்கிர புக்தி .
பாக்யாதிபதியான சுக்கிரன் ரமண மகரிஷியை PAUL BRUNTON மூலமாக உலகம் அறிய வைத்தார் .
ஏப்ரல் 14 , 1950 இல்  சூரிய தசை , சூரிய புக்தியில் மகரிஷி சிவனடி சேர்ந்தார் .
சூரியன் 12 ஆம் இடத்து அதிபதி மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதை கவனிக்கவும்